Wednesday, November 17, 2010

வௌவால் கனவுகள்

தூக்கத்தில் இருந்து எழுப்பப்பட்ட வௌவால் அவள் பக்கமாக சந்தேக பார்வை வீசுகிறது.
ஒத்தி வய்த்த கனவு ஒன்று சூரிய வெளிச்சத்தில் ஒளிருகின்றது.
வௌவால் கொக்கி பதித்த ரெக்கையை இன்னொரு  கிளையின் மீது விரிக்கிறது.
கனவு லேசாக நகர்கிறது. திடீரென்று ஆல மரத்தின் ஆணி வேர்களில் சறுக்கி, தரை இறங்கி, திடீரென்று கூந்தல் பனை மீது பாய்ந்து, அதன் கூந்தல் கோதி, மின்னலாய் பறந்து மரங்களுடன் விளையாடியது கனவா வௌவ்வாலா?
அவள் தோளில் அமர்ந்து, அவள் கூந்தலில் கூடு கட்டியது எது?
பூக்களுக்கு தாலாட்டுப் பாடி, மொட்டுகளை போர்த்தி விட்டு முத்தமிட்டு சென்று, சூரிய கதிர்களால் நெய்த ஆடை அணிந்து, நட்சத்திர ஒளியினால் ஓவியங்கள் வரைந்தது அவளா அல்லது கனவா அல்லது வௌவ்வாலா?

படம்: Bat Flower